படம்: தில்லுமுல்லு
பாடியவர்: எஸ்.பி.பி.
வரிகள்:கண்ணதாசன்.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்.

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

கலை மாது தான் மீட்டும்,இதமான வீணை,
கனிவான ஸ்வரம் பாட பதமானது(2)
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட,
ஆதர ஸ்ருதி கொண்ட வீணை அம்மா..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அரிவாய் அம்மா..

இடை ஆட,வளை ஆட,சலங்கைகள் ஆட,
இலையோடு கொடி பொல நடமாடினாள்(2)
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்,
ஆனந்தம் குடி கொண்ட கோலம் அம்மா..

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )



படம்: நினைத்தாலே இனிக்கும்
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்.

நம்ம ஊரு சிங்காரி, சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்

மன்மதன் வந்தானாம், சங்கதி சொன்னானாம்
மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்

(நம்ம ஊரு..)

பாலாடை போலாடும் பாப்பா, எப்பொதும் நான் சொன்னா கேப்பா (2)
நான் ஊரு விட்டு ஊரு வந்து நாளை வச்சு தேதி வச்சு
நீயின்றி போவேனோ ஸம்போ
நான் மூணு மெத்தை மாடி கட்டி, மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ ஸம்போ

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

அன்பான உன் பேச்சு ராகம், நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல், இனிமேலும் இதிலென்ன ஊடல்
இந்த தேவனுக்கு நீயும் சொந்தம், தேவதைக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நீயொன்று நானொன்றுதாம்மா

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (3)


தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவந்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ

விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது

விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ

ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
ஏசுநாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிரே என்னைப் பெண்ணாய் செய்க

அழகே அழகே உன் ஆசை வெல்க

(தீண்டாய்)

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ

உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன

பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

(தீண்டாய்)

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய் (2)
தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
படி தாண்டாய்...படி தாண்டாய்...
படி தாண்டாய்...படி தாண்டாய்...

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 12 )



அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பு புது மத்தாப்பு மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி
வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

பூ போன்ற கண்ணாலே தான் பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடு தான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல் தான் வண்ண பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடி பார்க்கும் அஞ்சலி தான்
நடந்து நடந்து வரும் பூச்செண்டு பூச்செண்டு
பறந்து பறந்து வரும் பொன்வண்டு பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கை கொண்டு கை கொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா நில்லாமல் கூட நீயும் ஓடி வா

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )

வேல வேல வேல...


படம்: அவ்வை சண்முகி.
பாடியவர்: S.P.B.
இசை: தேவா.
வரிகள்: வைரமுத்து.

வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

அவ்வ்வை சண்முகி...
வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஆத்தாடி இந்த மாமிதான்
கூத்தாடும் அர்த்தநாரி தான்
Duel Role இந்த வேஷம் தான்
ஏனென்றால் பிள்ளை பாசம் தான்
காளை உண்டு கன்றுக்காக
கறவை மாடாய் ஆளாக்கி
ஈன்றெடுத்த கன்றுக்கு இப்போ
இங்கிருந்து தாயாக்கி..
இது ஒரு அதிசயம்.. தனிப்பட்ட ரகசியம்
ரீபப்பா பரபப்பா.. தரத்தார ரிபப்பா
சிகுச்சக்கா சிகுச்சா.. ஜூஜூஜூஜூ

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு ஹ்ஹ இங்கு தாய்வேஷம்

ஆராரிராரோ ஓஓஓஒ.. ஓஓஓஒ
ஆரிராரோஓஓ..ஆரிராரோஓஓ
ஆரிராரோஓஓ

பாட்டிருந்து பாடப்பாட
தூங்குதம்மா சேய் கேட்டு
பாசமுள்ள பாட்டைக்கொஞ்சம்
தடுப்பதுண்டோ ஹைக்கோர்ட்டு

இளமையும் உடலையும் உனக்கென்ன பிரிப்பது
ரீபப்பா ரிபப்பா.. . தரத்தார ரிபப்பா
ஜுதததா ததத்தா சிகுச்சக்கா சிகுச்சா..

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

வேல வேல வேல மேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )



படம்: நினைத்தாலே இனிக்கும்
இசை: விஜய் ஆந்தோனி
பாடியவர்கள்: பிரசன்னா, ஜானகி ஐயர்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொல்லாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
(அழகாய்..)

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கை சிறை காணும் நேரம்
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஒரே கருவரை கண்ட நாளை
கண்ணில் ஈரம்
(அழகாய்..)

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே ஓஹோ
கவிதையின் வடிவில்
வாழ்ந்திட நினைப்போமே ஓஹோஹோ

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோஹோ
ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே ஓஹோஹோ

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுகிறேன் உன்னாலே
(அழகாய்..)

ஒரு முறை நினைத்தேன்
உயிர் வரை இனித்தாயே ஓஹோ
மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே ஓஹோஹோ

சிறு துளி விழுந்து
நிறை குடம் ஆனாயே ஓஹோஹோ
அறை கணம் பிரிவில்
வரைவிட செய்தாயே ஓஹோஹோ

நீ இல்லா நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தை போல் ஆவேனே
(அழகாய்..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

படம்: டிஷ்யூம்.
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்.
வரிகள்: வைரமுத்து.
இசை: விஜய் ஆண்டனி.

நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

(பூமிக்கு)

நீ விழியால் விழியை பறிதாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய்
உன் அழகால் எனை நீ அடிததாய்
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் என்னையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்
நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால்
என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி
மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்ட உடன் உருகும் ஒட்டி கொண்டு பழகும்
புத்தம் புது மிருகமே தெரிகிறதே

(பூமிக்கு)

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )

அழகு மலராட



படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: S. ஜானகி
வரிகள்: வைரமுத்து


அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்ப்லியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
(அழகு..)

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி
(அழகு..)

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவென்றும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேரென்ன நான் செய்த பாவம்
(அழகு..)

விரும்பிக்கேட்டவர் UNGALODU NAAN .

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )




படம் : சத்தம் போடாதே
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

அழகு குட்டிச்செல்லம் உனை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் ரெட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒழிந்து ஒழிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )



படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து


நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........



நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

.......... நிலா காய்கிறது .........

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )



படம்: தீனா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: விஜய் சாகர்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

(சொல்லாமல் தொட்டு...)

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே

(சொல்லாமல் தொட்டு...)

ஹே பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்? ஓ
கரையை கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே....

(சொல்லாமல் தொட்டு...)

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 4 )

படம்: புதிய பறவை.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்

(சிட்டுக்குருவி)

பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..

(சிட்டுக்குருவி)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனாம்
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனாம்
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனாம்
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனாம் ஹோய்..

(சிட்டுக்குருவி)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 9 )



படம்: கண்ணுக்குள் நிலவு.
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்.

எந்தன் குயில் எங்கே என்று பார்த்தேன் என்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என் நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி

(எந்தன்)

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி
கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக் குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி

அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கண்டாய் (2)
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

எந்தன் குயில் எங்கே என்று பார்த்தேன் என்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என் நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி

மரம் வளரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்

என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்(2)
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

(எந்தன்)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )



படம்: புன்னகை பூவே.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா, ப்ரேம்ஜி.

என் காதல் உயிர் பிழைத்துக்கொண்டது உன்னைப்பார்த்து
என் வானம் இங்கு விடியுதே
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத்தீண்டுமே.

கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ..
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ (2)

நான் நானில்லை அவள் என் உயிருக்குள்
ஒரு காதல் என்னும் சொல்லுக்குள் வாழ்வேன்

(என் காதல்)

நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே
என் இதய வானம் தரை மட்டமாகும் (2 )

ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா
நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம்(2)

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )



விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )



படம்: ஹே ராம்!
இசை: இளையராஜா.
வரிகள்: ஜீவன் ஆனந்த் தாஸ்.
குரல்: ஹரிஹரன், ஆஷா போஸ்லே.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா...

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே!

உயிரே வா...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

உயிரே வா...

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )



படம்: அமராவதி.
பாடியவர்: S.P.B.
இசை: பாலபாரதி.
வரிகள்: வைரமுத்து.

புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா?
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா?
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்...
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்..
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்....

(புத்தம் புது)

செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலைப் போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலைவாரிட வேண்டும்
நீ வந்து இலைப் போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என் விழி உன் இமை மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

(புத்தம் புது)

கன்னி உந்தன் மடி சாய வேண்டு்ம்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைக் கோதிட வேண்டு்ம்
கண்ணோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர்காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்...

(புத்தம் புது)

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 6 )


படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, மாயா, Dr. பெர்ன்
வரிகள்: பா. விஜய்


அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ


ஹசிலி ஃபிசிலி ரசமணி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஓய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வேங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியாய் பாதியாய்
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மெத்தை தீயா
(ஹசிலி..)

விரும்பிக்கேட்டவர் ஆளவந்தான்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )

படம்: கேப்டன் மகள்.
இசை: அம்சலேகா.

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ?
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது!
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா?
தெரித்து ஓடுதே அதுவா?
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா?அதுவா? அதுவா?
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?

அதை அறியாமல் விடமாட்டேன் !
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா?
தள்ளி உள்ளதே அதுவா?
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா?
தடவுகின்றதே அதுவா?
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா?
ஓரிரு வார்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னை தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

விரும்பிக்கேட்டவர் இரா.சிவக்குமரன்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 9 )


படம்: தாஜ்மஹால்
இசை: A.R. ரஹ்மான்.
வரிகள்: வைரமுத்து.
பாடியவர்கள்: மனோஜ் & அருந்ததி.

மாயே...மாயே யோ...(4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
(ஈச்சி)
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோமாயோ ஓஓஓ...
மாயோ ஓஓஓ...

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்ன பாக்கலையே
ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே
அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

(ஈச்சி)
(மாயோ)
தொழுவோடு சேராத பொலிகாள கூட
கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள
தாவணி பாத்து மெரளும்

ம்ம்ம்ம்...

பாசிமணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ...
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டயப் போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ...
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
(ஈச்சி)
மாயே...மாயே யோ...(4)
-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )


படம் : அன்பே சிவம்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து.
இசை: வித்யாசாகர்

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!
உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

ம்ம்..புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்
நம் காதல் வரை என்ன வண்ணம்?
உன் வெட்கத்தை விரல்தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின்
கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே,
வா வா............

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 8 )


படம் : என் சுவாசக்காற்றே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & சித்ரா

திறக்காத காட்டுக்குள்ளே
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போல
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி
வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு...
ஓடியோடி ஆலம் விழுதில்
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு..

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால்,
கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

(திறக்காத............)

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ
இல்லை உன்னைச் சொல்லுதோ
அட! புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது
அதோ அதோ அதோ அங்கே,
ஐயையோ! வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ
அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி
மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும்
காதல் காதல் காதல் காதல் காதல் யோசி

(திறக்காத............)

கை தட்டித் தட்டித் தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது
இதோ இதோ இதோ இதோ இங்கே...
ஆகாகா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ
அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு
காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

(திறக்காத...........)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )


படம்: ஜீலி கணபதி.
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்.
இசை: இளையராஜா.
வரிகள்: நா. முத்துகுமார்.

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )


படம்: மின்சார கனவு.
இசை: A.R. ரஹ்மான்.
வரிகள்: வைரமுத்து.
பாடியவர்: ஹரிஹரன்.
வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகென்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு?
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு?
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல
சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 7 )


படம் : ஆனந்த தாண்டவம்
இசை : GV பிரகாஷ்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : நித்யஸ்ரீ, வினித்ரா, சுபா

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய
என் சேலையும் உன் வேட்டியும் நாணும்
நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம்
நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்
தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல
சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்
தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம்
நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு
பூவாடையின்றி வேறாடைகள் இல்லை
ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும்
நீ என்பதும் நான் என்பதும் இல்லை

மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு
மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே
உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்
உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுமே

கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும்
வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )


படம் : லேசா லேசா
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கார்த்திக்

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே

கன்னிப் பெண்ணை கையிலே
வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்

சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம்
என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம்
என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே

ரோமியோவின் ஜீலியட்
தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி

அவளது அழகெல்லாம் எழுதிட
ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின்
உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே

அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே...
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே...
நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல்
கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல்
பாடல் ஒன்று பார்வை வார்த்ததே

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )


படம்: வாரணம் ஆயிரம்.
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்.
பாடியவர்: சுதா ரகுநாதன்.
வரிகள்: தாமரை.

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி

(அனல் மேலே..)

எந்த காற்றின் அளாவலில்
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில்
மன அறைகள் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததவே
இதயத்திலே இதயத்திலே
உனதிருவிழி தடவியதால்
அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கறை கறை

(அனல் மேலே..)

சந்தித்தோமே கனாக்களில்
சிலமுறையா பலமுறையா
அந்திவானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுமா கடலலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழி சொல்லுமா கலங்கரையே
உயரலைகள் எனை அடிக்க
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட

(அனல் மேலே..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

படம்: மோதி விளையாடு.
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி.
இசை : ஹரிஹரன்-லெஸ்லி.

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா?

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும்
என் வயது வலிக்குதடா

பறக்கும் முத்தம் கொடுத்து
எனை பறக்க சொல்லும் மன்மதா
விருந்தே உன்னை அழைக்க
பசி விலகி செல்வதா

காதல் என்னை காதல் செய்ய
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்
பூனை போல உள்ளே வந்தாய்
பானை இருக்கும் திசையை காட்டினேன்
பயந்து கொண்டே இதழ் குடித்தாய்
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமான கனவு ஒன்று
மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்

ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ
ஹோ பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே
வாரி கொடுத்தால் சுவர்க்கம் காண்பேன் நானே

பாதி காதல் பாதி முத்தம்
போதாது போதாது போடா
ஓ மீதி முத்தம் கேட்டு கேட்டு
மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி
உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது
உனை உதறி கொள்வதா?

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )


படம்: மௌனம் பேசியதே..
பாடியவர்: ஹரிஹரன்.
வரிகள்: வைரமுத்து.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

நா ந ந ந ந ந ந நா நா .. ந ந நா
ந ந ந நா நா ந நந ந நா..
நா ந ந ந ந ந ந நா நா ... ந ந நா
ந ந ந நா..

சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சை முட்களால் தைத்தாய்
உன்விழியின் வால் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் உன் உறவா...
உனை காதல் செய்வதே தவறா

உயிரே.... உயிரே....

காதல் செய்தால் பாவம்...
பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன்
உன்னால் பெண்ணே...

பெண்கள் கண்ணில் சிக்கும்...
ஆண்கள் எல்லாம் பாவம்...
உண்மை கண்டேன்
உன்னால் பெண்ணே....

ந ந.........

காதல் வெறும் மேகம் என்றேன்..
அடை மழையாய் வந்தாய்...
மழையோடு நனைந்திட வந்தேன்..
நீ தீயை மூடினாய்....
மொழியாக இருந்தேனே...
உன்னால் இசையாக மலர்ந்தேனே...

உயிரோடு கலந்தவள் நீதான் ..
ஹெய் பெண்ணே..
கனவாகி கலைந்ததும் ஏனோ..
சொல் கண்ணே..

மௌனம் பேசிதே...
உனக்கது தெரியலயா..
காதல் வார்த்தைகளை..
கண்கள் அறியலையா...

நா ந ந ...........
தொம் தொம் தொம் .........

துணை இன்றி தனியாய் சென்றேன்..
என் நிழலாய் வந்தாய்..
விடைத் தேடும் மாணவன் ஆனென்..
என் விடையும் நீயென...வந்தாயே..
என் வழியில்..கடல் தந்தாயே...
உன் மொழியில்...

என் நெஞ்சில் காதல் வந்து..
நான் சொன்னென்..
உன் காதல் வெறோர் மனதில்..
எனை நொந்தேன்...

கண்கள் உள்ளவரை...
காதல் அழிவதில்லை...
பெண்கள் உள்ளவரை...
ஆண்கள் ஜெயிப்பதில்லை...

நா ந ந ந ந........

காதல் செய்தால் பாவம்...
பெண்மை எல்லாம் மாயம்..

விரும்பிக்கேட்டவர் வழிப்போக்கன்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 7 )

படம்: அன்னை (1962)
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே ஆ...
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊரறியும்
கோவலன் என்பதை ஊரறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

படம் : கோடீஸ்வரன்
பாடியவர் : ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
இசை : ஆ.கோ.ஷ்

தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே...............
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே................
நீ நடந்து... போ!! கூட... என் நிழல் வரும் !!

(தொலைவினிலே)

பொன்வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உனைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா

(தொலைவினிலே)

நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்

(தொலைவினிலே)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

படம்: ப்ரியமுடன்.
இசை: தேவா.
பாடியவர்: ஹரிஹரன்.
வரிகள்: வைரமுத்து.

ஆகாச வாணி நீயே என் ராணி சுஜா சுஜா சுஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே சுஜா சுஜா சுஜா
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பதும் நாந்தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீரேன் ஏன் என்னுயிரே

(ஆகாச வாணி)

அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்
யாரிந்த குயிலை அழவைத்தது
மலர் மீது தானா சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதின்று தீர்மானமே
உனது சிரிப்பை கேட்டப்பின்பு அது பூக்குமே

(ஆகாச வாணி)

நிலா நிலா என்கூட வா
சலாம் சலாம் நான் போடவா
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
அன்னைத் தந்தையாக உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா

(ஆகாச வாணி)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )


படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
குரல்: சித்ரா, ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என்
கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை
தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடு ம் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

வேர்வை பூத்த உந்த சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )


படம்: அலைபாயுதே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

(எவனோ ஒருவன்)

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்

(எவனோ ஒருவன்)

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

(எவனோ ஒருவன் )

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )


படம்: காலமெல்லாம் காத்திருப்பேன்
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: தேவா

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே

செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா
சொந்தம் பந்தமே அன்புதானம்மா
அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவியாஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவியாஆஆஆஆ

தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா
என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )

படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்.
இசை: ஷங்கர் - கணேஷ்.
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்.
வரிகள்: குருவிக்கரம்பை சண்முகம்.

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
(ஓ நெஞ்சே..)

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
(ஓ நெஞ்சே..)

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
(ஓ நெஞ்சே..)

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
(ஓ நெஞ்சே..)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

பாடியவர்: மால்குடி சுபா.

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
நந்திப்பாற சந்திப்பார
அவரு என்ன மட்டும் சிந்திப்பார
பார என்னப் பார

எட்டிப் பாத்து நிப்பார
ஏங்கி ஏங்கி பாப்பார
ஏரிக்கர ஓரத்திலே காத்திருப்பார...

ரெண்டுக்கன்னம் தேன் பாற
விண்டு விண்டு திம்பார...

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

செம்பருத்தி நெஞ்சார
சம்மதத்த கேட்பார
சாதிசனம் சேர்ந்திருக்க கைப்பிடிப்பார...

வம்பளக்கும் ஊர் வாய
வாயடைக்க வெப்பார

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

தொட்டா மணப்பாற
நெய்முறுக்க கேட்பார
நெய்முறுக்கு சாக்குல என் கைக்கடிப்பார...

பாலிருக்கும் செம்பால
பசி தாகம் தீப்பார

வால்பாற வட்டப்பாற
மயிலாடும் பாற மஞ்சப்பாற
பார என்னப் பார

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

படம்: பிரியாத வரம் வேண்டும்.
பாடியவர்: ஹரிஹரன்.
வரிகள்: வைரமுத்து.

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளதோ எந்தன் குரல்
நான் என்ற நேரம் வரை தூவதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே

ஒரு வரி நீ .. ஒரு வரி நான்
திருக்குறள் நாம் உண்மை சொன்னேன்
தனிதனியே பிரித்து வைத்தல்
பொருள் தருமோ கவிதை இங்கே

உன் கைகள் என்றும் நான் துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போன்னேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே

நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் தெரிந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே


  • விரும்பிக்கேட்டவர் வந்தனா.

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 2 )

மனிதா! மனிதா!

மனிதா! மனிதா!
இதுதான் நீதியோ?
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ?

சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்.
வான் வீழ்வதோ!!!

பயணிகள் நடப்பார் நிழலில் நிழலில்!!!
நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்!!!
கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்!!!
கடத்திய படகோ அலையில் அலையில்!!!

உன் மேல் பிழையில்லை, இதில் வருத்தம் உதவாது.
தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது.
விதி வெல்லவோ!!!

உயரத்தை குறைத்தால், இமயம் ஏது?
துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்,
மனிதர்கள் பருக குடிநீர் ஏது?

மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்க்கையின் பாகம்.
எதனால் துன்பம் போகும், கொஞசம் சிரித்தால் துன்பம் போகும்.
சிரித்தால் என்ன?

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 9 )

படம்: அயன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: மஹதி, ஹரிஷ் ராகவேந்தரா

ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும் பொய்யாக‌க் க‌ண்டேனே.

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டுப் போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டுப் போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறிப் போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறிப் போக‌க் கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 5 )

படம்: தாளம்
இசை: A.R. ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், ஷோபா

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முதிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோள் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )

படம்: தாஜ்மஹால்
இசை: A.R.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன்,ஸ்வர்ணலதா

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடிக் கொண்டு தடவு
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான் கோழி கலவிக்கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு
சுடும் தீக்கூட அணைந்துவிடும்

அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

படம்: அழகிய தீயே
இசை: ரமேஷ் விநாயகம்
வரிகள்: கவிவர்மன்
பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம்

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?

காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி, நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!

அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!

விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!

இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 3 )

படம்: அயன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: நா.முத்துகுமார்
பாடியவர்: கார்த்திக்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 4 )

படம்: நேருக்கு நேர்
இசை: தேவா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா


(மனம்.....)


அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...


(நினைத்தாலே.....)


மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!


(நினைத்தாலே.....)

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 7 )

படம்: உயிரே
இசை: A.R.ரெஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
இன்னுயிரே காதலில் இரண்டாம் நிலை தான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிகின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வலி கொண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்துவிட்டேன்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்

கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இது வரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர் திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசநிலை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

இந்த காதலில் மரணம் தான் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது தெய்வீக காதலில்லை..........


இந்த காதலில் மரணம் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது காதல் இல்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை மரிப்பதில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே....................

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

படம்: மே மாதம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசை: A.R.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

மின்னலே நீ வந்ததேனடி
உன் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

(மின்னலே)

கண்விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம்
உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே)


பால் மழைக்கு காத்திருக்கும்
பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமி இல்லையா
வார்த்தைவர காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால்
காதல் இன்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே)


-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 16 )

படம்: வசீகரா
இசை: S.A.ராஜ்குமார்
வரிகள்: பா.விஜய்
பாடியவர்கள்: மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீநிவாஸ்.

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் ஒரு நொடி பார் என்றது,
ரெண்டு கரங்களும் சேர் என்றது,
உள்ளம் உனக்குத்தான் என்றது,

சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது,
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது,

(நெஞ்சம்)

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்,

கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்,
உன் முத்தம்தானே பற்றிக்கொண்ட முதல் தீ,

கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த,
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ,

உன் பார்வைதானே எந்தன்
நெஞ்சில் முதல் சலனம்,

அன்பே, என்றும் நீ அல்லவா,
கண்ணால் பேசும் முதல் கவிதை,

காலமுள்ள காலம் வரை,
நீதான் எந்தன் முதல் குழந்தை,

(நெஞ்சம்)

காதல் என்றால் அது பூவின் வடிவம்,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்,

காதல் வந்தால் இந்த பூமி நழுவும்,
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்,

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்,
ஒரு தட்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்,

காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்,
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்,

இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்,

காதல் என்ற வார்த்தையிலே,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்,

காதல் என்ற காற்றினிலே,
தூசி போல நாம் அலைவோம்,

(நெஞ்சம்)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 12 )

வரிகள்: தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், V.பிரசன்னா
படம் : வாரணம் ஆயிரம்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாமரை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதேபோகாதே..

(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..

வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால்
என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

(நெஞ்சுக்குள்..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

பாடியவர்கள்: பி. ஜெயச்சந்திரன், சித்ரா.
வரிகள்: வைரமுத்து
இசை: A.R. ரஹ்மான்
படம் : மே மாதம்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 8 )

படம்: சிவா மனசுல சக்தி.

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

திமிருக்கு மறுப்பெயர் நீ தானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயெனப் புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத் தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்துக்குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

உன் முகம் பார்த்தேன் நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடன் நான் வருவேன்
புன்னகை செய்தாய் உயிர் வாழ்வேன்
புறக்கனித்தான் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மெளனத்தில் இருக்கம் எண்ண வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்லும்

உல்லாயிலே........உல்லாயிலே.........

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே......


Read Users' Comments ( 15 )