மனிதா! மனிதா!

மனிதா! மனிதா!
இதுதான் நீதியோ?
காதல் புரிந்தால்
கண்ணீர் கூலியோ?

சிறகு விழுந்தால் புதிதாய் முளைக்கும்.
வான் வீழ்வதோ!!!

பயணிகள் நடப்பார் நிழலில் நிழலில்!!!
நிழல் தரும் மரமோ வெயிலில் வெயிலில்!!!
கடந்தவர் இருப்பார் கரையில் கரையில்!!!
கடத்திய படகோ அலையில் அலையில்!!!

உன் மேல் பிழையில்லை, இதில் வருத்தம் உதவாது.
தெய்வம் பிழை செய்தால் அதில் திருத்தம் கிடையாது.
விதி வெல்லவோ!!!

உயரத்தை குறைத்தால், இமயம் ஏது?
துயரத்தை கழித்தால், வாழ்க்கை ஏது?
மழைத்துளி எல்லாம் முத்துக்கள் ஆனால்,
மனிதர்கள் பருக குடிநீர் ஏது?

மனிதன் கொள்ளும் சோகம் அது வாழ்க்கையின் பாகம்.
எதனால் துன்பம் போகும், கொஞசம் சிரித்தால் துன்பம் போகும்.
சிரித்தால் என்ன?

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 9 )

படம்: அயன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: மஹதி, ஹரிஷ் ராகவேந்தரா

ஹ ஹ ஹ
ஹூம் ஹூம்
ஹ ஹ
ஹூம் ஹூம் ஹூம் ம்ம்ம்ம்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில் ஏன் சேர்கிறாய்.

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.

க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும் பொய்யாக‌க் க‌ண்டேனே.

அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் ஏற்றுப் போனேனே

வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்

உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்சும் என் பேச்சைக் கேட்காதே

காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டுப் போகாதே
காற்றும் நாம் பூமி ந‌மை விட்டுப் போகாதே

ஆகாய‌ம் இட‌ம் மாறிப் போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறிப் போக‌க் கூடாதே

ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே

அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்

உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்
ஹ ஹ ஹ ஹூம் ஹூம் ஹா ஹ ஹ ம்ம்ம் ம்ம்ம்

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 5 )

படம்: தாளம்
இசை: A.R. ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், ஷோபா

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முதிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோள் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாளிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை...]

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )

படம்: தாஜ்மஹால்
இசை: A.R.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன்,ஸ்வர்ணலதா

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலிலே தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடிக் கொண்டு தடவு
நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்
பேரின்ப பூசைகளே உன் பெண்மைக்கு பரிஹாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்
நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்
முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட ஆடை மழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகின்ற போதும்
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான் கோழி கலவிக்கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு
சுடும் தீக்கூட அணைந்துவிடும்

அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடல் அலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலின் உறவுகள் எரிவதில்லை

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

படம்: அழகிய தீயே
இசை: ரமேஷ் விநாயகம்
வரிகள்: கவிவர்மன்
பாடியவர்கள்: ரமேஷ் விநாயகம்

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!
அது ஏன் என்று யோசித்தேன்!
அட நான் எங்கு சுவாசித்தேன்?

காதோடு மெளனங்கள்,
இசை வார்க்கின்ற நேரங்கள்,
பசி, நீர் தூக்கம் இல்லாமல்,
உயிர் வாழ்கின்ற மாயங்கள்!

அலைகடலாய் இருந்த மனம்,
துளி துளியாய் சிதறியதே!
ஐம்புலனும், என் மனமும்,
எனக்கெதிராய் செயல்படுதே!

விழி காண முடியாத மாற்றம்!
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!
ஒரு மெளன புயல் வீசுதே!
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!
தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!
ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!
யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,
இதழ் தாண்டாத வார்த்தைகள்,
இமை ஆடாத பார்வைகள்,
இவை நான் கொண்ட மாற்றங்கள்!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!
இனி நில் என ஓர் நெஞ்சம்!
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,
ஒரு போர்க்காலம் ஆரம்பம்!

இருதயமே துடிக்கிறதா?
துடிப்பது போல் நடிக்கிறதா?
உரைத்திடவா? மறைத்திடவா?
ரகசியமாய் தவித்திடவா?

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?
எனை கத்தி இல்லாமல் கொய்யும்!
இதில் மீள வழி உள்ளதே,
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!
இது ஐந்து புலன்களின் ஏக்கம்!
என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!
பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!
இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!
அவள் நட்பை யாசித்தேன்!
அவள் பண்பை நேசித்தேன்!
வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 3 )

படம்: அயன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: நா.முத்துகுமார்
பாடியவர்: கார்த்திக்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணைக் கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

கடலாய்ப் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய்த் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்தக் காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

மழைக் கிளியே மழைக் கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னைக் கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றிப் பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னைப் பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்
முன்னே முன்னே
தனியாகப் பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழைக் காலம்
என் வாழ்வில் வருமா

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 4 )

படம்: நேருக்கு நேர்
இசை: தேவா
வரிகள்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி

மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடா
நெஞ்சில் உன் முகம்தானடா
அய்யய்யோ மறந்தேனடா
உன் பேரே தெரியாதடா


(மனம்.....)


அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
அதிலே என் மனம் தெளியும் முன்னே
அன்பே உந்தன் அழகு முகத்தை
யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
புயல் வந்து போனதொரு வனமாய்
ஆனதடா என்னுள்ளம்
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...


(நினைத்தாலே.....)


மழையோடு நான் கரைந்ததுமில்லை
வெயிலோடு நான் உருகியதில்லை
பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
மலைநாட்டுக் கரும்பாறை மேலே
தலை காட்டும் சிறு பூவைப்போலே
பொல்லாத இளங்காதல் பூத்ததடா
சட்டென்று சலனம் வருமென்று
ஜாதகத்தில் சொல்லலையே...
நெஞ்சோடு காதல் வருமென்று
நேற்றுவரை நம்பலையே
என் காதலா...! என் காதலா.....!
நீ வா! நீ வா! என் காதலா...!


(நினைத்தாலே.....)

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 7 )

படம்: உயிரே
இசை: A.R.ரெஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
இன்னுயிரே காதலில் இரண்டாம் நிலை தான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிகின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வலி கொண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்துவிட்டேன்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்

கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இது வரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர் திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசநிலை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

இந்த காதலில் மரணம் தான் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது தெய்வீக காதலில்லை..........


இந்த காதலில் மரணம் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது காதல் இல்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை மரிப்பதில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே....................

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

படம்: மே மாதம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசை: A.R.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

மின்னலே நீ வந்ததேனடி
உன் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

(மின்னலே)

கண்விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம்
உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே)


பால் மழைக்கு காத்திருக்கும்
பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமி இல்லையா
வார்த்தைவர காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால்
காதல் இன்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே)


-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 16 )

படம்: வசீகரா
இசை: S.A.ராஜ்குமார்
வரிகள்: பா.விஜய்
பாடியவர்கள்: மகாலக்ஷ்மி ஐயர், ஸ்ரீநிவாஸ்.

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது,
கண்கள் ஒரு நொடி பார் என்றது,
ரெண்டு கரங்களும் சேர் என்றது,
உள்ளம் உனக்குத்தான் என்றது,

சத்தமின்றி உதடுகளோ
முத்தம் எனக்கு தா என்றது,
உள்ளம் என்ற கதவுகளோ
உள்ளே உன்னை வா என்றது,

(நெஞ்சம்)

நீதான் நீதான் எந்தன் உள்ளம் திறந்து,
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்,

நீதான் நீதான் எந்தன் உயிர் கலந்து,
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்,

கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்,
உன் முத்தம்தானே பற்றிக்கொண்ட முதல் தீ,

கிள்ளும்போது எந்தன் கையில் கிடைத்த,
உன் விரல்தானே நானும் தொட்ட முதல் பூ,

உன் பார்வைதானே எந்தன்
நெஞ்சில் முதல் சலனம்,

அன்பே, என்றும் நீ அல்லவா,
கண்ணால் பேசும் முதல் கவிதை,

காலமுள்ள காலம் வரை,
நீதான் எந்தன் முதல் குழந்தை,

(நெஞ்சம்)

காதல் என்றால் அது பூவின் வடிவம்,
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்,

காதல் வந்தால் இந்த பூமி நழுவும்,
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்,

காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்,
ஒரு தட்ப வெப்ப மாற்றங்களும் நிகழும்,

காதல் வந்து கண்ணை தொட்டு எழுப்பும்,
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்,

இந்த காதல் வந்தால்
இலை கூட மலை சுமக்கும்,

காதல் என்ற வார்த்தையிலே,
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்,

காதல் என்ற காற்றினிலே,
தூசி போல நாம் அலைவோம்,

(நெஞ்சம்)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 12 )

வரிகள்: தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், தேவன், V.பிரசன்னா
படம் : வாரணம் ஆயிரம்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாமரை
பொன்வண்ணம் சூடிடும் காரிகை
பெண்ணே நீ காஞ்சனை

ஓம் ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

(நெஞ்சுக்குள்..)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தன்ம் ஏதும் இல்லா
புன்னகையோ போகும்மில்லா

நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதேபோகாதே..

(நெஞ்சுக்குள்...)

தூக்கங்களை தூக்கிச் சென்றாள்
தூக்கி சென்றாள்..
ஏக்கங்களை தூவிச் சென்றாள்
உன்னை தாண்டி போகும் போது
போகும் போது..

வீசும் காற்றின் வீச்சிலே
நில்லென்று நீ சொன்னால்
என் காதல் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
என தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

(நெஞ்சுக்குள்..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

பாடியவர்கள்: பி. ஜெயச்சந்திரன், சித்ரா.
வரிகள்: வைரமுத்து
இசை: A.R. ரஹ்மான்
படம் : மே மாதம்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 8 )

படம்: சிவா மனசுல சக்தி.

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

திமிருக்கு மறுப்பெயர் நீ தானே
தினம் தினம் முன்னால் இருந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீயெனப் புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னைத் தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்துக்குடித்தாலும்
அடிக்கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்
இந்தக் காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே

உன் முகம் பார்த்தேன் நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடன் நான் வருவேன்
புன்னகை செய்தாய் உயிர் வாழ்வேன்
புறக்கனித்தான் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
ஒரு மெளனத்தில் இருக்கம் எண்ண வலிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்று சொல்லும்

உல்லாயிலே........உல்லாயிலே.........

ஒரு கல் ஒருக்கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மெளனங்கள்
பேசாமல் பேசிக் கொண்டால் காதல்
கண் இரண்றென்றால்
காதல் வந்தால் ஓ........ஓ........
கண்ணீர் மட்டும் துணையாகுமே......


Read Users' Comments ( 15 )

நீயில்லை நிழலில்லை
நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்(நீயில்லை..)

உன் பேரை நான் எழுதி
என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி
உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்(நீயில்லை..)

பகலின்றி வாழ்ந்திருந்தேன்
சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்
வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய்
வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்(நீயில்லை..)


Read Users' Comments ( 1 )

செவ்வானம்...

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
கண்ணால் உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ

செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
பொன்னுடல் தன்னை என் கையில்
ஏந்த என்னடி யோசிக்கிறாய்
மொத்தத்தில் காதலின் எடை
என்னையாகும் இப்படி சோதிக்கிறாய்
நிலவை படைத்து முடித்த கையில்
அந்த பிரம்மன் உன்னை படைத்து விட்டான்
என்னை படைத்து முடித்த கையில்
அவன் உன்னை இங்கு அனுப்பிவைத்தான்[செவ்வானம்...]

செண்பகப்பூவின் மடல்களை
திறந்து தென்றல் தேடுவதென்ன
தென்றல் செய்த வேலையை
சொல்லி என்னை பார்ப்பதென்ன
பார்வையின் ஜாடை புரியாமல்
நீ பாட்டு பாடி ஆவதென்ன
பல்லவி சரணம் முடிந்தவுடன்
நாம் பங்குபெறும் காட்சியென்ன[செவ்வானம்...]


Read Users' Comments ( 3 )

காதல் கவிதைகள்

Yes.. I Love This Idiot!
I Love this Lovable Idiot!

காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம்
இது காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் ஒரு மோகம்
இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும்
அமுதம் வழிந்தோடும் அழகில் கலந்தாடும்
இதம் தரும்(காதல்..)

கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ
பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும்
இது மழையோ புயலோ நதியோ கலையழகோ
மேகமொன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி
இது தொடரும் மலரும் வளரும்
இனி கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும்(காதல்..)

பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை
தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தால் அது புதுமை
கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ
இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் தினம் தினம்(காதல்..)


Read Users' Comments ( 9 )