படம்: அன்னை (1962)
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே ஆ...
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊரறியும்
கோவலன் என்பதை ஊரறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )

படம் : கோடீஸ்வரன்
பாடியவர் : ஹரிஹரன்
வரிகள்: வைரமுத்து
இசை : ஆ.கோ.ஷ்

தொலைவினிலே வானம் தரை மேல் நானும்
தொடும் ஆசைகள் சிறகினை விரிக்குதே...............
மணி மணியாய்த் தூறல் மழை நாள் சாரல்
பட்டுப் பூச்சிகள் பார்வையில் பறக்குதே................
நீ நடந்து... போ!! கூட... என் நிழல் வரும் !!

(தொலைவினிலே)

பொன்வண்டு வாசல் வந்து பாடும்பொழுது
தாழ் போட்டு வைத்திருக்கும் பூக்கள் ஏது
நதியலை மெதுவாக வருடும் வேளையில்
உனைப்போல் நாணல் ஓடுமா ஒதுங்குமா

(தொலைவினிலே)

நீயின்றி நானிருந்தால் நிலவும் இருட்டு
என்னோடு நீயிருந்தால் இருட்டும் நிலவு
ஒரு துணை விரும்பாது உலகில் வாழ்வதா
அடடா பாவம் வாலிபம் வாடிடும்

(தொலைவினிலே)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )

படம்: ப்ரியமுடன்.
இசை: தேவா.
பாடியவர்: ஹரிஹரன்.
வரிகள்: வைரமுத்து.

ஆகாச வாணி நீயே என் ராணி சுஜா சுஜா சுஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே சுஜா சுஜா சுஜா
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பதும் நாந்தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீரேன் ஏன் என்னுயிரே

(ஆகாச வாணி)

அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்
யாரிந்த குயிலை அழவைத்தது
மலர் மீது தானா சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதின்று தீர்மானமே
உனது சிரிப்பை கேட்டப்பின்பு அது பூக்குமே

(ஆகாச வாணி)

நிலா நிலா என்கூட வா
சலாம் சலாம் நான் போடவா
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
அன்னைத் தந்தையாக உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா

(ஆகாச வாணி)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )


படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
குரல்: சித்ரா, ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா
விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என்
கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே

மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை
தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போடு ம் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்று வேண்டுதே

வேர்வை பூத்த உந்த சட்டை வாசம்
இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை (2)

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )


படம்: அலைபாயுதே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: ஸ்வர்ணலதா
பாடலாசிரியர்: வைரமுத்து

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை

(எவனோ ஒருவன்)

புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்

(எவனோ ஒருவன்)

உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள்மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

(எவனோ ஒருவன் )

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )


படம்: காலமெல்லாம் காத்திருப்பேன்
பாடியவர்: எஸ்.பி.பி
இசை: தேவா

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே

செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா
சொந்தம் பந்தமே அன்புதானம்மா
அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவியாஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவியாஆஆஆஆ

தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா
என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )