படம்: தீனா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிஹரன்
வரிகள்: விஜய் சாகர்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

(சொல்லாமல் தொட்டு...)

ஓ காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீதானே

(சொல்லாமல் தொட்டு...)

ஹே பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்? ஓ
கரையை கடந்தவன் யார்?
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே....

(சொல்லாமல் தொட்டு...)

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 4 )

படம்: புதிய பறவை.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக்கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக்கண்டேனே
மொட்டு விரித்த மலரினிலே வண்டு மூழ்கிடக்கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக்கண்டேனே- நான்

(சிட்டுக்குருவி)

பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பருவம் வந்தேன் தழுவ வந்தேன் பறவைத் துணை இல்லையே
எடுத்துச்சொல்ல மனம் இருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்..

(சிட்டுக்குருவி)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனாம்
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனாம்
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனாம்
இளமைத் தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனாம் ஹோய்..

(சிட்டுக்குருவி)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 9 )



படம்: கண்ணுக்குள் நிலவு.
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்.

எந்தன் குயில் எங்கே என்று பார்த்தேன் என்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என் நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி

(எந்தன்)

கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன்
படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி
கனவினிலும் என் நினைவினிலும்
கவிதைக் குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி

அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கண்டாய் (2)
வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை

எந்தன் குயில் எங்கே என்று பார்த்தேன் என்று பார்த்தேன்
கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன்
கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம்
சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம்
என் நிலையில் கொஞ்சம் நின்று
சொல் சொல் சொல் கண்மணி

மரம் வளரும் கொஞ்சம் இலை உதிரும்
கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே
அழகழகாய் இனி பூ மலரும்
ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும்

என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்(2)
என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு

(எந்தன்)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )



படம்: புன்னகை பூவே.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா, ப்ரேம்ஜி.

என் காதல் உயிர் பிழைத்துக்கொண்டது உன்னைப்பார்த்து
என் வானம் இங்கு விடியுதே
என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும்
உன் விரல்கள் எனைத்தீண்டுமே.

கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ..
காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ (2)

நான் நானில்லை அவள் என் உயிருக்குள்
ஒரு காதல் என்னும் சொல்லுக்குள் வாழ்வேன்

(என் காதல்)

நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே
என் இதய வானம் தரை மட்டமாகும் (2 )

ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா
நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம்(2)

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )



விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )



படம்: ஹே ராம்!
இசை: இளையராஜா.
வரிகள்: ஜீவன் ஆனந்த் தாஸ்.
குரல்: ஹரிஹரன், ஆஷா போஸ்லே.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

நான் என்ற சொல் இனி வேண்டாம்
நீ என்பதே இனி நான் தான்
இனிமேலும் வரம் கேட்கத்தேவை இல்லை
இது போல் வேரெங்கும் சொர்கம் இல்லைஉயிரே வா...

நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே!
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே!

உயிரே வா...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி!

உயிரே வா...

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )



படம்: அமராவதி.
பாடியவர்: S.P.B.
இசை: பாலபாரதி.
வரிகள்: வைரமுத்து.

புத்தம்புது மலரே என் ஆசை சொல்லவா?
பொத்திவைத்து மறைத்தேன் என் பாஷை சொல்லவா?
இதயம் திறந்து கேட்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்...
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்..
நித்தம் நித்தம் கற்பனைகள் வளர்த்தேன் தவித்தேன்....

(புத்தம் புது)

செல்லக் கிளி என்னைக் குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லுச் சிலைப் போல நீ நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலைவாரிட வேண்டும்
நீ வந்து இலைப் போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என் விழி உன் இமை மூட வேண்டும்
இருவரும் ஒரு சுரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்

(புத்தம் புது)

கன்னி உந்தன் மடி சாய வேண்டு்ம்
கம்பன் வரிகள் நீ சொல்ல வேண்டும்
உன்னைக் கட்டிக்கொண்டு தூங்க வேண்டும்
உந்தன் விரல் தலைக் கோதிட வேண்டு்ம்
கண்ணோடு இதம் காண வேண்டும்
கண்ணீரில் குளிர்காய வேண்டும்
உதட்டுக்கும் உதட்டுக்கும் தூரம் வேண்டும்
உயிருக்குள் உயிர் சென்று சேர வேண்டும்
தாயாய் சேயாய் மாற வேண்டும்...

(புத்தம் புது)

-அன்புடன்,
ஸ்ரீமதி.



Read Users' Comments ( 6 )


படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், ஹரிணி, மாயா, Dr. பெர்ன்
வரிகள்: பா. விஜய்


அன்பே உன்னால் மனம் freezing
அடடா காதல் என்றும் amazing
Excuse me let me tell you something
நீ சிரித்தால் ஐபோன் ட்ரிங் ட்ரிங்
நீ வீசும் அம்பு என் மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ


ஹசிலி ஃபிசிலி ரசமணி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகளி

எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் எனை வாசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி

அஞ்சனா அஞ்சனா கொஞ்சினால் தேன் தானா
என் கனா என் கனா என்றுமே நீதானா
(ஹசிலி..)

உரசாமல் அலசாமல் உயிரோடு ஊருது ஆசை
அதுங்காமல் இதுங்காமல் இருந்தால்தான் ஓய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகணை உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை உடைந்திடுமோ சேரு என்னை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமா
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொன்றாய்
(ஹசிலி..)

உயிரோடு உயிரோடு என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் இறங்குகிறாயே
யாரிதழில் யாரிதழோ வேர்த்துவிடும் வேங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடை பாதியாய் பாதியாய்
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப்பேயா மெத்தை தீயா
(ஹசிலி..)

விரும்பிக்கேட்டவர் ஆளவந்தான்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )

படம்: கேப்டன் மகள்.
இசை: அம்சலேகா.

எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ, அது ஏதோ?
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது!
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

கூந்தல் முடிகள், நெற்றி பரப்பில்
கோலம் போடுதே அதுவா?
கோலம் போடுதே அதுவா?
சிரிக்கும் போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா?
தெரித்து ஓடுதே அதுவா?
மூக்கின் மேலே மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே அதுவா?அதுவா? அதுவா?
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு
மிச்சம் உள்ளதே அதுவா? அதுவா? அதுவா?

அதை அறியாமல் விடமாட்டேன் !
அது வரை உன்னைத் தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா?
தள்ளி உள்ளதே அதுவா?
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா?
தடவுகின்றதே அதுவா?
ஒவ்வொரு வாக்கியம் முடியும் போதும்
புன்னகை செய்வாய் அதுவா? அதுவா? அதுவா?
ஓரிரு வார்தை தப்பாய் போனால்
உதடு கடிப்பாய் அதுவா? அதுவா? அதுவா?
அதை அறியாமல் விடமாட்டேன்!
அது வரை உன்னை தொடமாட்டேன்!

(எந்த பெண்ணிலும்)

விரும்பிக்கேட்டவர் இரா.சிவக்குமரன்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 9 )


படம்: தாஜ்மஹால்
இசை: A.R. ரஹ்மான்.
வரிகள்: வைரமுத்து.
பாடியவர்கள்: மனோஜ் & அருந்ததி.

மாயே...மாயே யோ...(4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி
(ஈச்சி)
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோமாயோ ஓஓஓ...
மாயோ ஓஓஓ...

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாரோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே
ஒத்த மழத்துளி பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்ன பாக்கலையே
ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே
அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

(ஈச்சி)
(மாயோ)
தொழுவோடு சேராத பொலிகாள கூட
கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள
தாவணி பாத்து மெரளும்

ம்ம்ம்ம்...

பாசிமணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ...
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டயப் போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ...
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி
(ஈச்சி)
மாயே...மாயே யோ...(4)
-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )


படம் : அன்பே சிவம்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்
வரிகள்: வைரமுத்து.
இசை: வித்யாசாகர்

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!
உயிர் அல்லதெல்லாம்
உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

ம்ம்..புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீலம் வண்ணம்
நம் காதல் வரை என்ன வண்ணம்?
உன் வெட்கத்தை விரல்தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின்
கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது?
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரைய தெரிந்த ஒரு நவீன கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு நலிந்த கவிஞன்
மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல
மடியோடு விழுந்தாயே,
வா வா............

பூ வாசம் புறப்படும் பெண்ணே
நான் பூ வரைந்தால்!
தீ வந்து விரல் சுடும் கண்ணே
நான் தீ வரைந்தால்!

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 8 )


படம் : என் சுவாசக்காற்றே
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : உன்னி கிருஷ்ணன் & சித்ரா

திறக்காத காட்டுக்குள்ளே
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போல
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்

பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி
வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு...
ஓடியோடி ஆலம் விழுதில்
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு..

அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்
நெஞ்சில் ஏக்கம் வந்தால்,
கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்

(திறக்காத............)

காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ
மண்ணோடு விழுகிற அருவி என்ன சொல்லுதோ
அது தன்னைச் சொல்லுதோ
இல்லை உன்னைச் சொல்லுதோ
அட! புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது
அதோ அதோ அதோ அங்கே,
ஐயையோ! வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ
அவை வண்ணச் சிறகுகளோ
வானவில் பறக்கின்றதோ
அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது
மேகம்போல் காட்டை நேசி
மீண்டும் நாம் ஆதிவாசி
உன் கண்கள் மூடும்
காதல் காதல் காதல் காதல் காதல் யோசி

(திறக்காத............)

கை தட்டித் தட்டித் தட்டி பூவை எழுப்பு
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு
அட என்ன நினைப்பு அதைச் சொல்லியனுப்பு
என் காலடியில் சில வீடுகள் நகருது
இதோ இதோ இதோ இதோ இங்கே...
ஆகாகா வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ
அவை நத்தைக் கூடுகளோ வீடுகள் இடம் மாறுமோ

புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது
நாட்டுக்குப் பூட்டு போடு
காட்டுக்குள் ஓடியாடு
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு

(திறக்காத...........)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )


படம்: ஜீலி கணபதி.
பாடியவர்: ஷ்ரேயா கோஷல்.
இசை: இளையராஜா.
வரிகள்: நா. முத்துகுமார்.

எனக்குப் பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு
அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

பித்துப் பிடித்ததைப் போல
அடி பேச்சு குழறுதே
வண்டு குடைவதைப் போலே
விழி மனசைக் குடையுதே
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர்த்துளி தீண்டினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 6 )


படம்: மின்சார கனவு.
இசை: A.R. ரஹ்மான்.
வரிகள்: வைரமுத்து.
பாடியவர்: ஹரிஹரன்.
வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகென்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு?
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு?
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல
சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே
உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல்
எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 7 )