Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts


பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிரு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள்...

அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமி பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூட சாயம்-போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுய சரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

உன் மூச்சில் நான் வாழ்தால்
என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில்
உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும்
கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம்
பந்தம் பேரானந்தம் - கண்ணே
உன் விழியல் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

விரும்பிக்கேட்டவர் கார்ததிக் ராஜா.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )


விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )


விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 1 )



படம்: தில்லுமுல்லு
பாடியவர்: எஸ்.பி.பி.
வரிகள்:கண்ணதாசன்.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்.

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

கலை மாது தான் மீட்டும்,இதமான வீணை,
கனிவான ஸ்வரம் பாட பதமானது(2)
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட,
ஆதர ஸ்ருதி கொண்ட வீணை அம்மா..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அரிவாய் அம்மா..

இடை ஆட,வளை ஆட,சலங்கைகள் ஆட,
இலையோடு கொடி பொல நடமாடினாள்(2)
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்,
ஆனந்தம் குடி கொண்ட கோலம் அம்மா..

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன,
பதினாரு பாட சுகமானது..(2)

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு,
நான் பாடும் போது அறிவாய் அம்மா..

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )



படம்: நினைத்தாலே இனிக்கும்
பாடியவர்: எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்.

நம்ம ஊரு சிங்காரி, சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூமுடிச்சு நின்னாளாம்

மன்மதன் வந்தானாம், சங்கதி சொன்னானாம்
மன்மதன் வந்தானாம் நல்ல சங்கதி சொன்னானாம்

(நம்ம ஊரு..)

பாலாடை போலாடும் பாப்பா, எப்பொதும் நான் சொன்னா கேப்பா (2)
நான் ஊரு விட்டு ஊரு வந்து நாளை வச்சு தேதி வச்சு
நீயின்றி போவேனோ ஸம்போ
நான் மூணு மெத்தை மாடி கட்டி, மாடி மேல ஒன்ன வெச்சு
பாக்காமல் போவேனோ ஸம்போ

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

அன்பான உன் பேச்சு ராகம், நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல், இனிமேலும் இதிலென்ன ஊடல்
இந்த தேவனுக்கு நீயும் சொந்தம், தேவதைக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
இந்த காதலுக்கு ஈடு சொல்ல காவியத்தில் யாருமில்லை
நீயொன்று நானொன்றுதாம்மா

(மன்மதன்..)
(நம்ம ஊரு..)

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )



அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம்தான் தங்கக்கனி
அம்மம்மா பிள்ளைக்கனி
அங்கம்தான் தங்கக்கனி
பொன்மணி சின்ன சின்ன
கண்மணி மின்ன மின்ன

கொஞ்சிட கொஞ்சிட வரும் கண்ணே நீ
புன்னகை சிந்திட வரும் பொன்னே நீ
முத்தமும் தந்திடும் சிறு பூவே நீ
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா
கண்ணே உன் மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும்
நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பு புது மத்தாப்பு மத்தாப்பு
உனது அழகுக்கென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கை தட்டி
வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

பூ போன்ற கண்ணாலே தான் பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடு தான் ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல் தான் வண்ண பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடி பார்க்கும் அஞ்சலி தான்
நடந்து நடந்து வரும் பூச்செண்டு பூச்செண்டு
பறந்து பறந்து வரும் பொன்வண்டு பொன்வண்டு
எடுக்க எடுக்க இரு கை கொண்டு கை கொண்டு
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா நில்லாமல் கூட நீயும் ஓடி வா

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )

வேல வேல வேல...


படம்: அவ்வை சண்முகி.
பாடியவர்: S.P.B.
இசை: தேவா.
வரிகள்: வைரமுத்து.

வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போன ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

அவ்வ்வை சண்முகி...
வேல வேல வேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்
ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய் ஹெய்

ஆத்தாடி இந்த மாமிதான்
கூத்தாடும் அர்த்தநாரி தான்
Duel Role இந்த வேஷம் தான்
ஏனென்றால் பிள்ளை பாசம் தான்
காளை உண்டு கன்றுக்காக
கறவை மாடாய் ஆளாக்கி
ஈன்றெடுத்த கன்றுக்கு இப்போ
இங்கிருந்து தாயாக்கி..
இது ஒரு அதிசயம்.. தனிப்பட்ட ரகசியம்
ரீபப்பா பரபப்பா.. தரத்தார ரிபப்பா
சிகுச்சக்கா சிகுச்சா.. ஜூஜூஜூஜூ

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

பார்த்தாச்சு பல மேடைதான்
போட்டாச்சு பல வேஷம தான்
ஆனாலும் இது வித்தியாசம்
தந்தைக்கு ஹ்ஹ இங்கு தாய்வேஷம்

ஆராரிராரோ ஓஓஓஒ.. ஓஓஓஒ
ஆரிராரோஓஓ..ஆரிராரோஓஓ
ஆரிராரோஓஓ

பாட்டிருந்து பாடப்பாட
தூங்குதம்மா சேய் கேட்டு
பாசமுள்ள பாட்டைக்கொஞ்சம்
தடுப்பதுண்டோ ஹைக்கோர்ட்டு

இளமையும் உடலையும் உனக்கென்ன பிரிப்பது
ரீபப்பா ரிபப்பா.. . தரத்தார ரிபப்பா
ஜுதததா ததத்தா சிகுச்சக்கா சிகுச்சா..

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

வேல வேல வேல மேல மேல வேல வேல
ஆம்பளைக்கும் வேல பொம்பளக்கும் வேல
பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேல

கால மால மால கால மேல மேல வேல வேல
எத்தனையோ வேல எப்பவுமே வேல
அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மால

சண்முகா..ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
உனது படைப்பில் உயர்ந்து விளங்கும் பெண்ணய்யாஆஆஆஆ
அவ்வ்வை சண்முகி...

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )

அழகு மலராட



படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: S. ஜானகி
வரிகள்: வைரமுத்து


அழகு மலராட அபினயங்கள் சூட
சிலம்ப்லியும் புலம்புவது கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது
(அழகு..)

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்
தேய்கின்ற மஞ்சல் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா
பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது
நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்
என் மேனி தரிசாக இருக்கின்றது
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை
இனிமை இல்லை வழ்வில் எதற்கு இந்த இளமை
பதிலேதும் இல்லாத கேள்வி
(அழகு..)

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாது
ஆதாரம் இல்லாமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது
தாலாட்டில் சேராத தனிப்பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் துடிக்கின்றது
விடியாத இரவென்றும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்த்தைகள் பொய்யானது
வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்
வேரென்ன நான் செய்த பாவம்
(அழகு..)

விரும்பிக்கேட்டவர் UNGALODU NAAN .

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 3 )




படம் : சத்தம் போடாதே
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடியவர் : சங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர் : ந.முத்துக்குமார்

அழகு குட்டிச்செல்லம் உனை அள்ளித்தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்
ஆளை கடத்தி போகும் உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன் நான் திரும்பி போக மாட்டேன்
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதர்க்கிந்த ஆராய்ச்சி
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை ஏனிந்த முட்டிக்கால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்துவிட்டான்
இப்படியோர் ரெட்டினக்கால் தோரனை... தோரனை
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

நீ தின்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சினுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத ரயிலை தவழ்ந்த படி நீ ஓட்டி போவாய்
வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒழிந்து ஒழிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே
சிஞ்சனிஞ்ச சிஞ்சனிஞ்ச சிஞ்சனி
மஞ்சனிஞ்சி மஞ்சனிஞ்சி மஞ்சரி [அழகு...]

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 4 )



படம் : இந்திரா
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்
வரிகள் : வைரமுத்து


நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்
இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்
இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........



நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்
தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே
இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்
காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை
என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே
இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே
இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே
இந்த வாழ்கையே சீதனம் அதில் ஜீவனே தேயுதே

.......... நிலா காய்கிறது .........

விரும்பிக்கேட்டவர் கார்த்திக்.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 2 )