பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டு குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிரு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள்...

அந்த விண்ணில் ஆனந்தம்
இந்த மண்ணில் ஆனந்தம்
அடி பூமி பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம்
மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூட சாயம்-போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம்
வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுய சரிதம்
அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

உன் மூச்சில் நான் வாழ்தால்
என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில்
உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும்
கருணை ஆனந்தம்
சொந்தம் ஓரானந்தம்
பந்தம் பேரானந்தம் - கண்ணே
உன் விழியல் பிறர்க்கழுதால்
கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சை கிளிகள்...

விரும்பிக்கேட்டவர் கார்ததிக் ராஜா.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


Read Users' Comments ( 5 )