படம்: டார்லிங் டார்லிங் டார்லிங்.
இசை: ஷங்கர் - கணேஷ்.
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்.
வரிகள்: குருவிக்கரம்பை சண்முகம்.

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
(ஓ நெஞ்சே..)

ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
(ஓ நெஞ்சே..)

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
(ஓ நெஞ்சே..)

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
(ஓ நெஞ்சே..)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


4 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

நன்றி நன்றி நன்றி...

கார்க்கிபவா said...

என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்

ம்ம்ம்ம்

அகில் பூங்குன்றன் said...

My Favourite song.....

கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்......

dharshini said...

நான் இந்த பாட்ட கேட்டதேயில்லை sri வரிகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கு.