படம்: ப்ரியமுடன்.
இசை: தேவா.
பாடியவர்: ஹரிஹரன்.
வரிகள்: வைரமுத்து.

ஆகாச வாணி நீயே என் ராணி சுஜா சுஜா சுஜா
தாய் போல நானே தாலாட்டுவேனே சுஜா சுஜா சுஜா
ஓ ப்ரியா உயிருக்கு அருகினில் இருப்பதும் நாந்தானே
ஓ ப்ரியா இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே
கண்ணீரேன் ஏன் என்னுயிரே

(ஆகாச வாணி)

அதோ அதோ ஓர் பூங்குயில்
இதோ இதோ உன் வார்த்தையில்
அதோ அதோ ஓர் பொன்மயில்
இதோ இதோ உன் ஜாடையில்
யாரிந்த குயிலை அழவைத்தது
மலர் மீது தானா சுமை வைப்பது
பூக்கள் கூடி போட்டதின்று தீர்மானமே
உனது சிரிப்பை கேட்டப்பின்பு அது பூக்குமே

(ஆகாச வாணி)

நிலா நிலா என்கூட வா
சலாம் சலாம் நான் போடவா
நிலவே நிலவே வெயில் கொண்டுவா
அன்னைத் தந்தையாக உன்னைக் காப்பேனம்மா
அன்பு தந்து உன்னில் என்னைப் பார்ப்பேனம்மா

(ஆகாச வாணி)

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


5 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

//யாரிந்த குயிலை அழவைத்தது
மலர் மீது தானா சுமை வைப்பது
பூககள் கூடி போட்டதின்று தீர்மானமே
உனது சிரிப்பை கேட்டப்பின்பு அது பூக்குமே//

எனக்கு பிடித்த வரிகள்

நன்றி ஸ்ரீமதி. வாழ்க உன் தொண்டு

Raju said...

வைரமுத்து வெளாண்ட்ருக்காப்ல.

வழிப்போக்கன் said...

இனிமையான பாடல்...

gnani said...

நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?

அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078 நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.

Karthik said...

நல்ல பாட்டு.

நான் அதிகம் கேட்டதில்லை.

நன்றி.

(wow, it rhymes!!) :)