படம்: அன்னை (1962)
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

காவியக் கண்ணகி இதயத்திலே ஆ...
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊரறியும்
கோவலன் என்பதை ஊரறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

விரும்பிக்கேட்டவர் கார்க்கி.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


5 பேர் உடன் ரசித்தவர்கள்:

கார்க்கிபவா said...

மின்னல் வேக பதிவுக்கு நன்றி

வழிப்போக்கன் said...

வரிகள் அருமை...

நான் முதல் முறையாக உங்களிடம் கேற்கும் பாடல்...
“சின்ன சின்னதாய்” - மெளனம் பேசியதே....

தயவு செய்து பதிவிலிடுங்கள்...
:))))

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு...
இப்பதான் முதல் முறையா பாக்குறேன்.
நல்லா இருக்கு தொடர்க...

Anonymous said...

நல்லாத்தான் இருக்கு...
இப்பதான் முதல் முறையா பாக்குறேன்.
நல்லா இருக்கு தொடர்க...

Karthik said...

கார்க்கி ஒரு என்சைக்ளோபீடியானு தெளிவா தெரியுது. இந்த பாட்டை எல்லாம் நான் கேட்டதே இல்ல. :)