படம்: டிஷ்யூம்.
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்.
வரிகள்: வைரமுத்து.
இசை: விஜய் ஆண்டனி.

நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

(பூமிக்கு)

நீ விழியால் விழியை பறிதாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய்
உன் அழகால் எனை நீ அடிததாய்
ஓர் அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் என்னையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்
நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால்
என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி
மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்ட உடன் உருகும் ஒட்டி கொண்டு பழகும்
புத்தம் புது மிருகமே தெரிகிறதே

(பூமிக்கு)

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவியதால்

விரும்பிக்கேட்டவர் kanavugalkalam.

-அன்புடன்,
ஸ்ரீமதி.


2 பேர் உடன் ரசித்தவர்கள்:

kanavugalkalam said...

நன்றி மேடம்...

தீ said...

அருமையான பாடல் நன்றி பெண்ணே
(தீ)