நீயில்லை நிழலில்லை
நிழல் கூட துணையில்லை
நீதானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீராகின்றாய்(நீயில்லை..)

உன் பேரை நான் எழுதி
என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி
உன்னில்தான் சந்தித்தேன்
காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா
சொல் சொல்(நீயில்லை..)

பகலின்றி வாழ்ந்திருந்தேன்
சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்
வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய்
வாடவும் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா
சொல் சொல்(நீயில்லை..)


1 பேர் உடன் ரசித்தவர்கள்:

dharshini said...

hariharan voicela.... super song
i saw one time the video song, i think abbas and simran right.