பாடியவர்கள்: பி. ஜெயச்சந்திரன், சித்ரா.
வரிகள்: வைரமுத்து
இசை: A.R. ரஹ்மான்
படம் : மே மாதம்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

மண்ணை திறந்தால் நீர் இருக்கும் என்
மனதை திறந்தால் நீ இருப்பாய்

ஒலியை திறந்தால் இசை இருக்கும் என்
உயிரை திறந்தால் நீ இருப்பாய்

வானம் திறந்தால் மழை இருக்கும் என்
மனதைத் திறந்தால் நீ இருப்பாய்

இரவை திறந்தால் பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ

மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக் கொண்டால்
பாஷை ஊமையாய் விடுமோ

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்


-அன்புடன்,
ஸ்ரீமதி.



8 பேர் உடன் ரசித்தவர்கள்:

Vidhya Chandrasekaran said...

அப்படியே பாடியவர், இசையமைப்பாளர் விவரங்களையும் போடு ஸ்ரீ.

Subha said...

என் மேல விழுமா மழைத்துளி :)
எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

ஆயில்யன் said...

சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)

ஆயில்யன் said...

//விரும்பிக்கேட்டவர் ஆயில்யன்//


ஆஹா டேமேஜாக்கிட்டியேம்மா!தமிழ்பிரியர்கள் நல்லவன்ங்களெல்லாம் வர்ற இடமாச்சே....!

:))

Unknown said...

நன்றி வித்யா வருகைக்கு :))விவரங்களை சேர்த்துட்டேன்.. :))

நன்றி சுபா முதல் வருகைக்கு :)) உங்க மேல மழை விழனும்னா.. அதுக்கு நீங்க மழைல நிக்கணும்.. ;)))

நன்றி ஆயில்யன் அண்ணா :)) அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க அண்ணா.. ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. :)))

சந்தனமுல்லை said...

ஆகா...ஆயில்ஸ்..என்னப்பா விஷயம்!?! :-)

ஆயில்யன் said...

//சந்தனமுல்லை said...
ஆகா...ஆயில்ஸ்..என்னப்பா விஷயம்!?! :-)
///

ம்ஹுக்கும் இந்த பாட்டு புடிக்கும் அவ்ளோதான்!

MSK / Saravana said...

எனக்கு மே மாதத்தின் எல்லா பாடல்களும் மிகவும் பிடிக்கும்.. குறிப்பாக "மின்னலே".. முடிஞ்சா அதையும் பதிவிடேன்..