படம்: உயிரே
இசை: A.R.ரெஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே
வந்து சேர்ந்து விடு என்னை சேர விடு இல்லை சாக விடு

சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்
நம் காதலிலே வரும் ஜோதியிலே
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்
காதலர் கண்களே சந்திர சூரியன் ஆகாதோ

கைகள் நான்கும் தீண்டும் முன்னே
கண்கள் நான்கும் தீண்டிடுமே
மோகம் கொஞ்சம் முளை விடுமே
கண் பார்வை முதல் நிலையே

ஆருயிரே என்னுயிரே உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
இன்னுயிரே காதலில் இரண்டாம் நிலை தான் பால் மயக்கம்
மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
இது காதலின் மூன்றாம் படி நிலையோ
என் உடல் வழி அமிர்தம் வழிகின்றதோ
என் உயிர் மட்டும் புது வித வலி கொண்டதோ

என்னுயிரே என்னுயிரே உன்னை கொஞ்சம் தீண்டுவேன்
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்
இதில் நான்காம் நிலையை அடைந்துவிட்டேன்
என் நறுமலரே உன்னை தொழுதுவிட்டேன்
என் சுய நினைவென்பதை இழந்துவிட்டேன்
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்

கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
நாம் இது வரை கண்டது நான்கு நிலை
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே

என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
என் உயிரை உனக்குள் ஊற்றி விட்டேன்
இதுதான் காதலில் ஐந்து நிலை
நான் உன் கையில் நீர் திவலை

ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை
இது மோசநிலை ஒரு முக்தி நிலை
நம் காதலிலே இது ஆறு நிலை

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே

இந்த காதலில் மரணம் தான் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது தெய்வீக காதலில்லை..........


இந்த காதலில் மரணம் ஏழு நிலை
இது இல்லை என்றால் அது காதல் இல்லை
உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில்லை மரிப்பதில்லை
என் ஆருயிரே என் ஓருயிரே....................

-அன்புடன்,
ஸ்ரீமதி.


4 பேர் உடன் ரசித்தவர்கள்:

ஆயில்யன் said...

மீ த பஷ்ட்டேய்ய்ய்ய்ய்ய் :)

ஆயில்யன் said...

//கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே//


நல்லா இருக்குல்ல இந்த வரிகள்:)

கார்க்கிபவா said...

/என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை//

என்னடா அப்துல் அண்ணன் இந்த பாட்டு கேட்கறாரேன்னு பார்த்தேன்.. புரிஞ்சுடுச்சு

Unknown said...

நன்றி ஆயில்யன் அண்ணா

நன்றி கார்க்கி.. அண்ணாவ கிண்டல் பண்ணாத :))