படம்: மே மாதம்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இசை: A.R.ரஹ்மான்
வரிகள்: வைரமுத்து

மின்னலே நீ வந்ததேனடி
உன் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

(மின்னலே)

கண்விழித்து பார்த்தபோது
கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவு சின்னமே
கதறி கதறி எனது உள்ளம்
உடைந்து போனதே
இன்று சிதறி போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே)


பால் மழைக்கு காத்திருக்கும்
பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமி இல்லையா
வார்த்தைவர காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால்
காதல் இன்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(மின்னலே)


-அன்புடன்,
ஸ்ரீமதி.


16 பேர் உடன் ரசித்தவர்கள்:

ஆயில்யன் said...

மின்னல் வேகத்துல அடுத்த பாட்டை ம்ஹும் நம்மளால கும்மி அடிக்க இயலாது மீ த பாட்டு படிச்சுட்டு எஸ்ஸாகிக்கிறேன்

எம்.எம்.அப்துல்லா said...

//மின்னல் வேகத்துல அடுத்த பாட்டை ம்ஹும் நம்மளால கும்மி அடிக்க இயலாது மீ த பாட்டு படிச்சுட்டு எஸ்ஸாகிக்கிறேன்

//

டோண்ட் ஒர்ரி நான் கண்டின்யூ ஆயிக்கிறேன் :)

எம்.எம்.அப்துல்லா said...

அடடா...நான் கேட்ட பாட்டை போடலயே...வெளிநடப்பு பண்றேன்.

எம்.எம்.அப்துல்லா said...

// பாடியவர்: ஹரிஹரன் //

புலவரே உமது பாடலில் சொற்பிழை இருக்கின்றது.அதைப் பாடியது என் மானசீக குருநாதர் எஸ்.பி.பி.

கார்க்கிபவா said...

//பால் மழைக்கு காத்திருக்கும்
பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும்
சாமி இல்லையா
வார்த்தைவர காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால்
காதல் இன்னும் நீளுமில்லையா?
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்//

ச்சே.. என்னமா எழுதறாரு கவிஞர். சான்ஸே இல்லை

எம்.எம்.அப்துல்லா said...

//என் வானிலே நீ வரைந்துபோன மாயமென்னடி

//

புலவரே மீண்டும் பிழை :)

என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி

எம்.எம்.அப்துல்லா said...

//ச்சே.. என்னமா எழுதறாரு கவிஞர். சான்ஸே இல்லை //

ஆமா சின்னப் பசங்க நிறையபேரு எழுத வந்துட்டதால கவிஞர்.வைரமுத்து சான்ஸே இல்லாமத்தான் இருக்காரு :)

Vidhya Chandrasekaran said...

லவ்லி:)

dharshini said...

எம்.எம்.அப்துல்லா said...

//ச்சே.. என்னமா எழுதறாரு கவிஞர். சான்ஸே இல்லை //

ஆமா சின்னப் பசங்க நிறையபேரு எழுத வந்துட்டதால கவிஞர்.வைரமுத்து சான்ஸே இல்லாமத்தான் இருக்காரு :)//

ஹா ஹா அப்துல்லா அண்ணா இதெல்லாம் உங்களுக்கு தானா வருதா?!

dharshini said...

கார்கி அண்ணா அதுக்காக இப்படியா வானத்தையே வெறிச்சு பார்த்துனு இருப்பீங்க!(யாராவது வானத்துல இருந்து தேவதை வரும்னு சொல்லிட்டாங்களா?)

MSK / Saravana said...

நன்றி ஸ்ரீ..
எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல் இது..

MSK / Saravana said...

அப்பறம்..
பாடலை சரியா எழுதி இருக்க.. ஆனா என் பெயரை தப்பா எழுதி இருக்க.. :(

MSK / Saravana said...

"அழகிய தீயே" படத்தில் வரும் "விழிகளில் அருகினில் வானம்" பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அப்பறம் தீபாவளி படத்தில் வரும் "போகாதே போகாதே" பாடலும்..

all time favorites.. :)

உயிரோடை said...

ஏனுங்க என்னை கூப்பிட்டீங்களா?

அதுவும் ஏன் வந்தேன்னு கேட்கறீங்களே ம்ம்ம்ம்ம் என்னவோ போங்

Unknown said...

நன்றி ஆயில்யன் அண்ணா

நன்றி அப்துல்லா அண்ணா.. சொற்பிழை பொருட்பிழை எல்லாம் திருத்தியாச்சு அண்ணா :))

நன்றி கார்க்கி

நன்றி வித்யா

நன்றி தர்ஷினி

நன்றி சரவணா.. சாரி சரவணா கவனிக்கவே இல்ல.. :((

நன்றி மின்னல்

Anonymous said...

பிடித்த பாடல் இது